இராணுவ ஹெலிகாப்டர் சோதனையின் போது விபத்து.. 3 இராணுவ வீரர்கள் பரிதாப பலி.!!
in america helicopter accident 3 army officers died
அமெரிக்கா நாட்டில் உள்ள மின்னசோட்டா பகுதியில் அமெரிக்க நாட்டிற்கு சொந்தமாக இருக்கும் இராணுவ சோதனை மையமானது உள்ளது. இந்த மையத்தில் இருந்து யு.என் 60 பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர் சோதனையின் போது மூன்று இராணுவ வீரர்கள் இருந்த நிலையில்., ஹெலிகாப்டர் நன்கு இயங்கிக்கொண்டு இருந்துள்ளது. இந்த நேரத்தில்., ஹெலிகாப்டர் திடீரென தரைதளத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்துள்ளது.
இதனையடுத்து மின்னிபோலிஸ் நகரில் இருந்து 95 கிமீ தொலைவில் இருந்து செயின்ட் கிளவுட் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்த தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தது விபத்தை உறுதி செய்த நிலையில்., இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய பாதுகாப்பு படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும்., இரங்கலும் தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in america helicopter accident 3 army officers died