அமெரிக்காவில் மீண்டும் அரங்கேறிய துப்பாக்கி சூடு.. அரங்கேறிய கொடூரம்.. ஏற்பட்ட சோகம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாடுகளில் துப்பாக்கி சூட்டால் மக்கள் பரிதாபமாக பலியாகி வருவது தொடர்ந்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் அரங்கேறியும்., இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தாலும்., இது போன்ற தாக்குதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட மர்ம நபரொருவர் சுட்டதில்., இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்., மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகர் பகுதியில் இருக்கும் பிரெஞ்சு குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் திடீரென மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுடத்துவங்கினர். கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் 11 பேர் படுகாயமடைந்த நிலையில்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பெரும் அச்சத்தில் மக்கள் உள்ளனர். மேலும்., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america gun fire shoot in news Aryans peoples injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->