சூப்பர் மார்க்கெட்டில் திடீர் துப்பாக்கி சூடு..! விரைந்த அதிகாரிகள்., விசாரணையில் பகீர் தகவல்.!!
in america gun fire attack peoples died police investigation
அமெரிக்காவில் துப்பாக்கி சட்டபூர்வமாக பாதுகாப்பிற்காக அங்கீகாரம் செய்யப்பட்ட நிலையில்., சில நேரங்களில் பல கொலைகளும் அரங்கேறி வருகிறது. மேலும்., அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் மற்றும் பிற நாட்டினை சார்ந்த மக்களின் மீது தாக்குதல் போன்றவை அரங்கேறி வருகிறது.
மேலும்., பயங்கரவாத தாக்குதலும் அரங்கேறி வருகிறது. இதனால் மக்கள் பரிதாபமாக பலியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தும் நிலையில்., அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல்கள் அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்., அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் துப்பாக்கி சூடானது நடைபெற்றுள்ளது.
அமெரிக்கா நாட்டில் உள்ள நியூஜெர்சி நகரில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் உட்பட 2 இடங்களில் தீடீரென மர்ம நபர்களால் துப்பாக்கி சூடானது நடந்தது. இந்த விஷயம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடங்களுக்கு விரைந்தனர்.
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல் துறையினர் அதிரடியாக சுட்டு கொலை செய்த நிலையில்., மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்., இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகித்துள்ளதால் விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in america gun fire attack peoples died police investigation