சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் அத்துமீறிய மருத்துவர்.! விசாரணையில் அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!!
in america girl patients sexual harassment by doctor police investigation going on
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளில் பெரும்பாலாவை பெண்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே இழைக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியானது பெரும் அதிர்வலையை நம்மிடையே பதிவு செய்கிறது.
இந்த நிலையில்., உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவரிடம் செல்லும் சமயத்திலும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களால் பாலியல் தொல்லை வழங்கும் சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்தவரின் பெயர் ஜார்ஜ் டின்டால். இவர் மருத்துவ தேர்வின் சமயத்தில் சுமார் 16 இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக தொடர் குற்றசாட்டு எழுந்தது.
இந்த நிலையில்., இது குறித்த விசாரணையில் ஈடுபடும் சமயத்தில் கடந்த 30 வருட காலத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட பெண்களிடம் அத்துமீறியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
மருத்துவராக பணியாற்ற துவங்கிய கடந்த 1990 ஆம் வருடத்தில் இருந்து இது போன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டதும்., ஆசிய கண்டத்தினை சார்ந்த பெண்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவிகள் அதிகளவு பாதிப்பிற்குள்ளாகினர் என்பதும் தெரியவந்தது. இவருக்கு எதிரான ஆதாரங்களை தற்போது காவல் துறையினர் பெற்று வருவதாகவும்., விரைவில் குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் தக்க தண்டனை வாங்கி தரப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in america girl patients sexual harassment by doctor police investigation going on