தலையை எக்ஸ்ரே எடுத்த பெண்மணிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! துடிதுடித்து அலறிய பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள பெண்மணியின் தலைக்குள் துப்பாக்கி குண்டானது இருப்பதாய் அறியாமல், அவரை மருத்துவ பரிசோதனை முடிந்துவிட்டது என்று கூறி மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா நாட்டில் உள்ள தென்மேற்கு மியாமி பகுதியில் உள்ள டேட் கவுண்டி பகுதியை சார்ந்தவர் ஷஹினா ஜெபர்சன். இவர் ஓரினசேர்கையாளராக இருந்த நிலையில், இவர் தன் தோழியான ஜேனட் மெட்டலி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் நல்லபடியாக வாழ்ந்து வந்த நிலயில், கடந்த செவ்வாய்கிழமையின் போது, இவர்களின் வீட்டு வாசலுக்கு வந்த மர்ம நபரொருவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளான். 

இதனையடுத்து இவர் அங்குள்ள மருத்துவமனையில் மீட்கப்பட்டு அனுமதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு எக்ஸ்ரே எடுக்காமல் தலையில் கட்டுப்போட்டு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு வந்த சில நாட்களில் தலையில் அதிகளவு வலி ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பார்க்கும் போது, தலைக்கு உள்ளே துப்பாக்கி குண்டு துளைத்திருந்தது தெரியவந்தது. இதன்பின்னர் அறுவை சிகிச்சை மூலமாக குண்டு வெளியே எடுக்கப்பட்ட நிலையில், இவரது உடல்நலம் குறித்த விபரம் வெளியாகவில்லை. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america girl head gun fire bullet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->