குழந்தையில்லாமல் தவித்து உயிரணுவை தானம் கேட்ட தம்பதிக்கு கண்ணீர் சோகம்.!!
in america couple cry to no baby
அமெரிக்கா நாட்டில் வசித்து வந்த தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில்., இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பல மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நிலையில்., இவர்கள் பெண்ணின் உயிரணுவை தானமாக பெற முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து தெரியாத யாரோ ஒரு நபரிடம் இருந்து உயிரணுவை பெறுவதை விட., தங்களின் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து உயிரணுவை பெற்று குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்து., தனது கணவரின் சகோதரரான எரிக் என்பவரை தேர்வு செய்துள்ளனர்.
மேலும்., எரிக்கிற்க்கு ஏற்கனவே குழந்தை இருக்கும் நிலையில்., இவர் கல்லூரியில் பயின்று வந்த சமயத்தில்., உயிரணு தானம் செய்ததை அறிந்து., அவரிடம் உயிரணு கேட்ட நிலையில்., இவர்களின் கோரிக்கையை ஏற்ற எரிக் உயிரணுவை தர இயலாது என்று கூறாமல்., பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.
உயிரணுவை கேட்டதற்கு எரிக் தரப்பில் இருந்து வந்த குறுஞ்செய்தியில் "சொந்த வீடு இருக்கும் நபருக்கு மட்டுமே உயிரணு தானம் செய்யப்படும் என்றும்., அவ்வாறான சொந்த வீடு தனித்த வீடாக இருக்க வேண்டும் என்றும்., நல்ல பணியில் இருக்க வேண்டும் என்றும்., நான் எந்த மதத்தினை ஆதரித்து உள்ளேனோ? அந்த மதத்தினை சார்ந்தவராக இருவரும் மாற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை கேட்டு கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான தம்பதியினர் செய்வதறியாது திகைக்கவே., தங்களுக்கு குழந்தையே வேண்டாம் என்று பெண் முடிவிற்கு வந்த நிலையில்., நாம் எபப்டியாவது குழந்தைக்கு தாயாக - தந்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணி விரைவில் சம்மதம் தெரிவிக்க தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in america couple cry to no baby