வீட்டில் பற்றி எரிந்த தீ.. சுதாரிப்பாக செயல்பட்ட 5 வயது சிறுவன்..! குடும்பத்தினருக்கு குலதெய்வமாக காட்சியளித்த குழந்தை.!!  - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் இருக்கும் பார்டவ் நகரில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்து வரும் இல்லத்தின் படுக்கையறையில் தீடீரென தீ பற்றி இருந்துள்ளது. 

இந்த நிலையில், இக்குடும்பத்தை சார்ந்த 5 வயதுடைய சிறுவன் நொவ் உட்ஸ் தனது தங்கையுடன் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், படுக்கையறையில் பிடித்த தீயை பார்த்துள்ளான்..

இதனையடுத்து எந்த விதமான பதற்றத்திற்கும் உள்ளாகாமல் சுத்தரிப்புடன் செயல்பட்டு, தனது குடும்பத்தினை காப்பாற்றும் பொருட்டு செயல்பட்டுள்ளான். முதலில் தனது 2 வயது தங்கையை எழுப்பிய நொவ், ஜன்னல் வழியாக வெளிய அனுப்பியுள்ளான். 

பின்னர் இதே அறையில் இருந்த செல்லப்பிராணியான நாயையும் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசிவிட்டு, பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டு இருந்த  தனது அம்மா, அப்பா மற்றும் மாமா என அனைவரையும் எழுப்பியுள்ளான்..

உறக்கத்தில் இருந்த அனைவரும் விபரீதத்தை புரிந்துகொண்ட சிறுவனை தூக்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்க்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறுவன் நொவ் விரைவாக செய்யப்பட்டு தனது குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றிய தகவலை அறிந்த வீரர்கள் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகினர். மேலும், சிறுவன் நொவ்க்கு நகர தீயணைப்புத்துறை நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு விருதும் வழங்கி கவுரவம் செய்யப்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america child rescued form fire accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->