பிறந்து ஆறு வாரமேயான பச்சிளம் குழந்தை கரோனாவால் பலியான பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகரில் உள்ள சந்தையில், இறால் விற்பனை செய்யும் பெண்மணிக்கு ஏற்பட்ட வைரஸ் நோயானது உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கூட்டம் கூட்டமாக மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், மேலை நாடுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். 

நேற்றைய நிலவரப்படி உலகளவில் பலி எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கிடைத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனாவால் 935,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,223 பேர் பலியாகியுள்ளனர். 194,260 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 

அமெரிக்காவில் நேற்றைய தினத்தில் 26,473 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 215,003 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று ஒரே தினத்தில் சுமார் 1,049 பேர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 5,102 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள கனக்டிகட் மாகாணத்தில் இருக்கும் ஹார்ட்போட் பகுதியை சார்ந்த தம்பதிக்கு பிறந்த ஆறு வாரம் நிரம்பிய குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு மேற்கொண்ட சோதனையில் கரோனா உறுதியானதை அடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று இக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america 6 week born child died due to corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->