மகப்பேறு மருத்துவமனையில் தீ விபத்து..! தீக்கிரையான 8 பச்சிளம் குழந்தைகள்...!! பெரும் சோகம்.!!
in algeria hospital fire 8 babies died
இந்த உலகம் முழுவதும் பல்வேறு விதமான விபத்துகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறான விபத்துகளில் பல மக்கள் பரிதாபமாகி தங்களின் உயிரை இழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும்., மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக நடைபெறும் விபத்துகள் நம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
உடல்நல குறைவால் பலர் மருத்துவமனையில் அனுமதியாகி இருக்கும் நிலையில்., மருத்துவமனையில் ஏற்படும் விபத்தானது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. இதனைப்போன்ற ஒரு துயரம் சம்பவம் அரங்கேறி., குழந்தைகள் உயிரிழந்ததும் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
அல்கெரிய நாட்டில் இருக்கும் அல்ஜீரியாஸ் நகரில் மகப்பேறு மருத்துவமனையானது செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில்., இன்று அதிகாலையில் உள்ளூர் நேரப்படி., 3.50 க்கு திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது. இந்த தீயானது அடுத்தடுத்து பிற தலங்களுக்கும் பரவ துவங்கியது.
இந்த செய்தி குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து., தீயை பெரும் போராட்டத்திற்கு பின்னர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில்., மருத்துவமனையில் இருந்த 8 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்த சுமார் 11 குழந்தைகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பெண்கள்., 28 ஊழியர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த தீவிபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in algeria hospital fire 8 babies died