இராணுவ முகாம் மீது கொடூர தாக்குதல்.! 72 இராணுவ வீரர்கள் பரிதாப பலி.!!
in Africa Niger army attack 72 army officers died
ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் மேற்கு பகுதியில் நைஜர் நாடு உள்ளது. இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாகவே மாலி., நைஜர் மற்றும் பர்கினோ பாசோ போன்ற பல பயங்கரவாதிகளின் நடமாட்டம் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நாட்டுடைய எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு., இவர்களை ஒடுக்குவதற்கு நைஜர் இராணுவம் மற்றும் அண்டை நாடான மாலி நாட்டின் இராணுவத்துடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்., பிரான்ஸ் நாடும் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் பயங்கரவாதத்தை ஒடுக்க உதவி செய்து., தன்னாட்டு இராணுவ வீரர்களையும் அனுப்பி வருகிறது.
மேலும்., பிரான்ஸ் நாட்டுடைய அதிபர் மேக்ரோன் பர்கினோ பாசோ நாட்டில் இருக்கும் செஹால் பகுதியில் மேற்கு ஆப்ரிக்க தலைவர்களை சந்தித்து பேசஉள்ள நிலையில்., நைஜர் நாட்டில் உள்ள இராணுவ வீரர்களின் முகாமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் சுமார் 72 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள பகுதியில் இராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்த நிலையில்., இத்தாக்குதல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Africa Niger army attack 72 army officers died