இராணுவ முகாமில் அத்துமீறி தாக்குதல்.. 23 இராணுவ வீரர்கள் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.!!
in Africa Mali terrorist attack army peoples died
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள மேற்கு ஆப்ரிக்க பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகளின் ஆதரவுடன் பல பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்குள்ள மாலி பகுதியில் இவர்களின் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இவர்கள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில், இவர்களை ஒழிக்கும் தீவிர நடவடிக்கையில் அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் அதிகளவு நடந்து வருகிறது.
அங்குள்ள ஜியோ மாகாணத்தில் இருக்கும் பம்பா நகரில் உள்ள இராணுவ முகாமை தாக்க திட்டமிட்ட பயங்கரவாதிகள், நேற்று திடீரென தாக்குதலில் எடுப்படவே, இந்த தாக்குதலில் முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 23 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Africa Mali terrorist attack army peoples died