பயங்காவாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதல்.. 29 இராணுவ வீரர்கள் பரிதாப பலி.!!
In Africa Mali terrorist attack
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு மாலி. இந்த நாட்டில் அல்கொய்தா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகம். மேலும், இவர்களின் ஆதரவின் கீழ் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினர் சில நேரங்களில் தாக்குதலில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது.
இது போன்ற பயங்கரவாத அமைப்புகளை அழிக்கும் நடவடிக்கையை உள்நாட்டு இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பயங்கரவாத கும்பலை தேடி வேட்டையாடி வருகின்றனர்.
இதன் காரணமாக அவ்வப்போது பயங்கரவாத அமைப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடுமையான மோதல்களும் ஏற்படுவது உண்டு. இந்நிலையில், மாலியில் இருக்கும் ஜியோ நகரின் தர்கின்ட் கிராமத்தில் உள்ள இராணுவ தளத்தினை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின் போது 29 பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சண்டை நிறைவுபெற்றதை அடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
In Africa Mali terrorist attack