அப்பாவி மக்களை சரமாரியாக சுட்டுத்தள்ளிய பயங்கரவாதிகள்.. 43 பேர் பரிதாப பலி..!! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்காவில் உள்ள மேற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் இருக்கும் பர்கினோ பாசோ, நைஜீரியா மற்றும் மாலி பகுதிகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம்.

இந்த இரண்டு பயங்கரவாத அமைப்பிற்கும் சில கிராமங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பல அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்கள் அவ்வப்போது தொடர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

பர்கினோ பாசோவில் உள்ள யடங்கா மாகாணத்தில் உள்ள பர்கா மற்றும் டின்குய்லா கிராமத்தில் உள்ள மக்கள் ஒருதரப்பு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இந்த கிராமத்திற்குள் மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்துள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் சுமார் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அறிந்த காவல் துறையினர் மற்றும் இராணுவம் சம்பவம் இடத்திற்கு விரைந்து தேவையான உதவியை செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Africa Burkina Faso terrorist attack people died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->