அகதிகள் படகு கவிழ்ந்து பெரும் விபத்து.! 80 பேர் நீரில் முழ்ங்கி பரிதாபமாக பலியான சோகம்.!! - Seithipunal
Seithipunal


ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் பஞ்சம் மற்றும் உள்நாட்டு கலவரங்களின் காரணமாக அங்கிருக்கும் மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்வது தொடர்கதையாகியுள்ளது. இந்த நேரத்தில் அகதிகளாக செல்லும் மக்களில் பெரும்பாலானோர் படகு மற்றும் கப்பல் வழியான ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். 

இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் நடுக்கடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் பிற காரணங்களால் படகு கவிழ்ந்து பலியாகி வரும் சோகமானது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில்., இதனை போன்ற துயரமானது மீண்டும் அரங்கேறியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

ஆப்ரிக்காவில் உள்ள லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டை நோக்கி படகில் பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்தனர். இவர்களின் படகில் சுமார் 80 க்கும் மேற்பட்ட மக்கள் பயணித்துக்கொண்டு இருந்த நிலையில்., இந்த படகானது அங்குள்ள துனிசியா கடற்கரை பகுதிக்கு அருகே சென்றுள்ளது. 

இந்த சமயத்தில்., படகில் அதிக பாரத்தின் காரணமாக திடீரென கவிழ்ந்துள்ளது. இதனால் படகில் பயணம் செய்த மக்கள் அனைவரும் நீரில் தத்தளித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை கண்ட அங்குள்ள மீனவ மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததில் நீரில் தத்தளித்த நால்வரை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. 

நீரில் தத்தளித்த நால்வரை மீட்ட மீனவர்கள் உடனடியாக கரைக்கு அழைத்து வந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்., நால்வரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுமட்டுமல்லாது படகில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர் என்று ஐநா அகதிகள் முகமை அமைப்பானது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Africa boat collapsed in sea 80 peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->