தன்வினை தன்னை சுட்ட கதையாக, பாம் வைத்து தானே உடல் சிதறி உயிரிழந்த பயங்கரவாதிகள்.!!
in Afghanistan terrorist died self bomb blast
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2001 ஆம் வருடம் முதலாகவே தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டு சண்டையில், அரசு படைக்கு ஆதரவாக அமெரிக்க நேட்டோ படைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த போரினை முடிவிற்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசு தலிபான் அமைப்பினருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்து, இதன் முடிவாக அமைதி ஒப்பந்தமும் அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி பிறநாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று உறுதியளித்த நிலையில், உள்நாட்டு படைகளின் மீதான தாக்குதலை தொடருவோம் என்றும் அறிவித்தனர். இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
அரசு படையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல், தற்கொலைப்படை தாக்குதல் போன்றவை தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வரும் நிலயில், நேற்று அங்குள்ள ஹோர் மாகாணத்தில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டு பயங்கரவாதிகள் நெடுஞ்சாலையில் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்த நிலையில், வெடிகுண்டுகள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடிப்பில் 3 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Afghanistan terrorist died self bomb blast