ஆப்கானிஸ்தானில் அரங்கேறிய கொடூர தாக்குதல்.. 27 அப்பாவி மக்கள் பரிதாப பலி.!
in Afghanistan terrorist attack peoples died
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் படி, அமெரிக்க படைகளை வாபஸ் பெற அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இருதரப்பினரும் தாக்குதல்களை நிறுத்தினர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டை சார்ந்த அரசு படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்த நிலையில், மக்கள் மீதான தாக்குதலும் தொடர்ந்து வந்துள்ளது. காபூலில் இருக்கும் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமான குருத்வாராவில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் மேற்கொண்ட நிலையில், பாதுகாப்பு படையினர் இப்பகுதியை சுற்றிவளைத்து பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 27 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்தனர். பதிலடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Afghanistan terrorist attack peoples died