இராணுவ சாவடியில் தற்கொலைப்படை தாக்குதல்..! 80 பேர் படுகாயம்.. பெண் பரிதாப பலி.!!
in Afghanistan terrorist attack in air base 80 peoples injured one girl died
ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பானது கடந்த சில வருடங்களாகவே தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். அப்பாவி பொதுமக்கள் மீது தொடர்ந்து குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவங்களை கட்டுக்குள் வைக்கவும்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை குறைக்கவும்., ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுப்படைகள் மற்றும் அமெரிக்காவின் தலைமையிலான இராணுவ கூட்டுப்படைகளை சேர்ந்து., வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பயங்கரவாத இயக்கத்தினருக்கும் - இராணுவ படைக்கும் அவ்வப்போது கடுமையான மோதல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சில சமயத்தில் இராணுவ நிலைகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., அவ்வப்போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மொத்தமாக இராணுவத்தினர் வசம் சரணடைவதும் நிகழ்ந்து கொண்டு உள்ளது.
இந்த நிலையில்., ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தலைநகர் காபூல் வடக்குப்பகுதியில் அமெரிக்க விமானப்படை தளம் இருக்கிறது. இந்த பகுதியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதி முடிவு செய்து., காரில் குண்டுகளை நிரப்பிக்கொண்டு விமானப்படை தளத்தின் கதவில் மோதி வெடிக்கச்செய்தான்.
இந்த விபத்தில் அப்பகுதி முழுவதுமாக புகைமண்டலமாக மாறி வீடுகள் சேதமடைந்த நிலையில்., ஒரு பெண் பலியாகியுள்ளதாகவும்., சுமார் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Afghanistan terrorist attack in air base 80 peoples injured one girl died