உடலில் வெடிகுண்டை சுமந்து வெடிக்க செய்த 12 வயது சிறுவன்.! அட்டூழியத்தை அரங்கேற்றிய பயங்கரவாத அமைப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தலானது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உலகில் உள்ள பல நாடுகளில் பல்வேறு தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றி வரும் நிலையில்., பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பதற்கு அரசாங்கம் பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு பகுதியில் நாங்கர்ஹார் மாகாணமானது உள்ளது. இந்த மாகாணத்திற்கு உட்பட்ட பசீவரா ஆகம் என்ற பகுதியில் வசித்து வந்த மாலில் தோர் என்பவரின் இல்லத்தில் திருமண நிகழ்வானது நடைபெற்று வந்தது. இந்த சமயத்தில்., இவர்களின் உறவினர்கள் பலர் திருமண நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு இருந்துள்ளனர். 

bomb blast, fire work explosion,

இந்த நேரத்தில்., திருமண விழாவிற்கு வந்த 12 வயதுடைய சிறுவன் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்யவே., சம்பவ இடத்திலேயே சிறுவன் உட்பட 6 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். இவர்களை பதறியபடி மீட்ட உறவினர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., மாலில் தோர் அரசு படைக்கு ஆதரவானவர் என்ற காரணத்தால் பயங்கரவாத அமைப்பில் இருந்து தற்கொலை தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும்., 12 வயதுடைய சிறுவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் சோகமாக உள்ளது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Afghanistan terrorist attack by 12 year old child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->