இராணுவ பயிற்சி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்..! அரங்கேறிய சோகம்.!!
in Afghanistan suicide bomb attack 4 army officers injured
ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பானது கடந்த சில வருடங்களாகவே தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். அப்பாவி பொதுமக்கள் மீது தொடர்ந்து குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவங்களை கட்டுக்குள் வைக்கவும்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை குறைக்கவும்., ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுப்படைகள் மற்றும் அமெரிக்காவின் தலைமையிலான இராணுவ கூட்டுப்படைகளை சேர்ந்து., வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பயங்கரவாத இயக்கத்தினருக்கும் - இராணுவ படைக்கும் அவ்வப்போது கடுமையான மோதல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சில சமயத்தில் இராணுவ நிலைகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்., ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தலைநகர் காபூலில் இருக்கும் இராணுவ பயிற்சி மையத்திற்கு உடலில் குண்டுகளை கட்டி வந்த தீவிரவாதி., தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இந்த தாக்குதலில் சுமார் 4 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த இராணுவ வீரர்களை மீட்ட சக வீரர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும்., காயமடைந்த இராணுவ வீரர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வரும் நிலையில்., இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த விதமான பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில்., இந்த தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Afghanistan suicide bomb attack 4 army officers injured