ஆப்கானிஸ்தானில் அரசு படை அதிரடி தாக்குதல்.. 12 பயங்கரவாதிகள் கொலை.!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2001 ஆம் வருடம் முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே சண்டையானது நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் அரசு படைகளுக்கு ஆதரவாக, அமெரிக்காவின் நேட்டோ படை செயல்பட்டு வந்தது. 

இந்த உள்நாட்டு போரினை முடிவிற்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியுடன் தலிபான் அமைப்பு மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுததானது. இந்த ஒப்பந்தத்தின் படி, பிறநாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உறுதியளிக்கப்பட்டது. 

இருப்பினும், ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படையுடன் தாக்குதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் என்று தெரிவித்த நிலையில், அரசு படையினருக்கும் - தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே மோதல் அதிகளவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் இருக்கும் ஷா வாலி கோட் மாவட்டத்தில் இருக்கும் தலிபான் மறைவிடத்தை கண்டறிந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Afghanistan govt army killed Taliban terrorist


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->