பலத்த சத்தத்துடன் வெடித்த அதிபயங்கர வெடிகுண்டு..! 9 மாணவர்கள் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் தலிபான் அமைப்பானது கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில்., அப்பாவி பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இந்த தாக்குதல் சம்பவங்களை குறைக்கும் பொருட்டும்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை குறைக்கும் பொருட்டும் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுப்படை மற்றும் அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படைகளை ஒன்றிணைந்து., வான்வழி தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். 

terrorist,

இதன் காரணமாக பயங்கரவாத இயக்கத்திற்கும் - இராணுவ படையினருக்கும் அவ்வப்போது கடுமையான மோதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்., ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள டாடாக்கர் மாகாணத்தில் இருக்கும் தர்காத் மாவட்டத்தில் பயங்கர சக்திவாய்ந்த வெடிகுண்டானது வெடித்துள்ளது. 

இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 9 மாணவர்கள் பரிதாபமாக பலியான நிலையில்., மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டு இருக்கும் போது., இந்த துயரம் அரங்கேறியுள்ளதாக அங்குள்ள உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில்., இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Afghanistan bomb blast people died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->