காவல் துறை வாகனத்தில் குண்டு வெடித்து., பரிதாபமாக பலியான காவல்துறை அதிகாரி.!!
in Afghanistan bomb blast in police car 1 officer died in spot
இந்த உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உலகளவில் உள்ள நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி., மக்களை பாதுக்காக்க கடுமையான போராட்டத்தை நடத்திக்கொண்டு வருகிறது.
அந்தந்த நாடுகள் தங்களின் மக்களை காக்கும் பொருட்டு., பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு., தீவிரவாதத்தை வேறறுத்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது எதிர்பாராத விதமாக தீவிரவாத தாக்குதல் அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்., ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தலானது கடந்த சில மாதங்களாகவே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள கிரேஷாக் மாவட்டத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியின் போது சாலையின் ஓரத்தில் இருக்கும் மரத்திற்கு அருகில் வாகனத்தை வைத்திருந்த நிலையில்., திடீரென வெடிகுண்டானது வெடித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்., வாகனத்திற்கு அருகில் இருந்த நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில்., உயிருக்காக போராடி துடித்துள்ளனர். இவர்களை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்காத நிலையில்., இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Afghanistan bomb blast in police car 1 officer died in spot