பயங்கரவாத இயக்கத்தின் 5 தளபதிகள், 15 பயங்கரவாதிகள் கொலை.. இராணுவம் அதிரடி.!!
in Afghanistan army attack terrorist and killed
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 19 வருடமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரினை முடிவிற்கு கொண்டு வருவதற்காக அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தங்களின் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே சமயத்தில்., ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் சார்பாக தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை குறைக்க தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தலிபான்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் பகுதியில் அமெரிக்க படைகளின் உதவியோடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்க படைகளின் உதவியுடன் தரைவழி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்., ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் லக்மன் மாகாணம் அமைந்துள்ளது.
இந்த மாகாணத்தின் ஆலிங்கர் மாவட்டத்தில் உள்ள தலிபான் பயங்கரவாத அமைப்புடைய முக்கிய தளபதிகள் ஒன்றுகூடியிருப்பதாக இரகசிய தகவல் இராணுவத்திற்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் 5 தளபதிகளும் கொல்லப்பட்ட நிலையில்., இவர்களுடன் இருந்த 15 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள்., வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Afghanistan army attack terrorist and killed