அரசு படைகளின் தாக்குதலுக்கு 10 தீவிரவாதிகள் கொலை..!
in Afghanistan 10 terrorist killed by army
உலகம் முழுவதிலும் பயங்கரவாதிகளின் ஆதிக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வரும் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு., அந்தந்த நாட்டின் அரசாங்கமும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் தலிபான் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகளவில் இருந்த நிலையில்., இவர்களின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு அமெரிக்க கூட்டு படைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு படைகள் இணைந்து பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை குறைத்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டு., அப்பாவி மக்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு படையினரும் அவ்வப்போது பதில் தாக்குதல் மற்றும் அதிரடி வேட்டையில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில்., ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நன்கர்ஹார் மாவட்டத்தில் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில் சுமார் 10 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். மேலும்., அவர்களிடம் இருந்து ஏரளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களின் பதுங்கு குழிகள் மற்றும் மறைவிட கட்டுப்பாட்டு மையங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Afghanistan 10 terrorist killed by army