இந்தியா குறித்து சரமாரி குற்றசாட்டு வைத்த இம்ரான்கான்... உலகநாடுகளை சப்போர்டுக்கு அழைப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாக்கிஸ்தான் நாடானது, இந்தியாவின் மீது விஷம பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு மறைமுக ஒத்துழைப்பு சீனாவும் வழங்கி வருகிறது. 

ஜம்முவில் நடைபெறும் பயன்வரவைத்த தாக்குதல்கள் அனைத்தும் உள்ளூர் பிரச்சனை காரணமாக நடைபெறுவதாகவும், இதற்கும் பாகிஸ்தானிற்கும் சம்பந்தம் இல்லை என்றும், பொய்யான காரணத்தை கூறிய இந்தியா போர் நடவடிக்கை துவங்கியிருப்பதாக இம்ரான்கான் ட்விட்டரில் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், இந்திய ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு, காஷ்மீர் மிருகத்தனத்தின் நேரடிவிளைவு. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சேர்ந்து பாசிச கட்டுப்பாடுகளை வைத்து அபாயம் நிறைந்ததாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பொறுப்பற்ற நடவடிக்கை தெற்காசிய அமைதியை பாதிக்கும். 

பாக்கிஸ்தான் மீது தவறான போர் நடவடிக்கைக்கு சாக்காக இந்தியா கூறி வரும் பொய்களை உலகிற்கு எடுத்துரைத்து வருகிறேன். ஊடுருவல் குறித்து இந்தியாவின் ஆதாரமற்ற குற்றசாட்டு ஆபத்தான தொடர்ச்சி என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imran khan foolish twit about india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->