பணத்திற்காக இணையத்தில் விற்கப்பட்ட ஆபாச வீடியோ! இதுவரை 45 மாணவிகள்.. கணவன், மனைவி செய்த கொடூர செயல்!!
husband wife sexual harassment for college girls
பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னை ஒரு தம்பதியினர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
கல்லூரி முடிந்து பேருந்துக்காக நான் நின்றுகொண்டு இந்தபோது ஒரு பெண் தன்னை கல்லூரி மாணவி என என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். தன்னை அழைத்துச் செல்ல சகோதரர் வருவதாகவும், போகும் வழியில் உன்னையும் இறக்கிவிடுகிறேன் என்று கூறினார்.
சிறிது நேரத்தில் ஒருவர் காரில் அங்கு வந்தார். பின்பு காரில் ஏறிய அந்த பெண் என்னையும் வலுக்கட்டாயமாக அந்த காரில் ஏற்றினார்.அதன்பின் என் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
அந்த கார் அவர்களுடைய வீட்டுக்கு சென்றது. என்னையும் அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்குவைத்து என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் அதை அந்தப் பெண் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்துக்கொண்டார். இங்கு நடந்ததை வெளியே சொன்னால் இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார் என்று புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து அந்தப் பெண் கூறிய அடையாளங்களை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த தம்பதியினரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
மாணவிகளை கடத்தி வந்து தங்களுடைய வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை புகைப்படம், வீடியோவாக எடுத்து ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்ததாகவும், இதுவரை 45 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அதில் சிலர் சிறுமிகள் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
husband wife sexual harassment for college girls