நான் ஒருத்தி போதாதா உனக்கு.? கணவரை கிழித்தெடுத்த முதல் மனைவி.. 3ஆவது திருமணத்தில் நடந்தேறிய அலப்பறைகள்..!!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் வசித்து வருபவர் ஆசிஃப் ரஃபிக் இவருக்கு சமீபத்தில் திருமண வரவேற்பு நடந்துகொண்டு இருந்தது. அப்போது திருமண மண்டபத்திற்குள் தனது உறவினர்களுடன் நுழைந்த மதிஷா என்னும் பெண், அங்கு அமர்ந்திருந்த மணமகனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து மணமகனிடம் விசாரித்தபோது, அவர்தான் ரஃபிக்கின் முதல் மனைவி மதிஹா என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், தன்னிடம் சொல்லாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை மணந்து இருப்பதாகவும் முதல் மனைவி குற்றம் சாட்டினார்.

பின்னர், இரண்டாவது திருமணத்துக்குப் பின் ரஃபிக் அது குறித்து என்னிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதாகவும், பின்னர் தன்னுடன் மட்டுமே இறுதிவரையிலும் வாழ்வேன் என்று உறுதி அளித்ததாகவும் மதிஹா தெரிவித்தார்.

இந்த நிலையில் அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முன்வந்துள்ளார். இதனை அறிந்த மதிஹா அவருடைய உறவினர்களுடன் திருமண வரவேற்புக்கு அதிரடியாக நுழைந்து அவரது கணவனின் ஆடைகளைக் கிழித்து பயங்கரமாக தாக்கி இருக்கிறார். மேலும் இது குறித்து போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளார். காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband ready for 3rd marriage wife caught


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->