குருத்துவார் தாக்குதலில் முக்கிய புள்ளியை தூக்கிய காவல்துறையினர்.. தொடரும் அதிரடி நடவடிக்கை..!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூல் குருத்துவார் சீக்கியர்களின் வழிபாட்டு தளத்தில் 25 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் இந்தியர் உட்பட 27 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். 

இந்த தாக்குதலின் போது 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெளிப்படையாக பொறுப்பேற்றது. 

மேலும், இந்த 3 பயங்கரவாதிகளால் ஒருவர் இந்தியர் என்றும், கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.மேலும், இதில் சில பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தான் காவல் துறையினர் நாடு முழுவதும் தேடுதல் வேட்டையை அதிகரித்தனர். 

இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியை காவல் துறையினர் கைது செய்த நிலையில், இவனுடைய கூட்டாளிகள் 19 பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பாக்கிஸ்தான் நாட்டினை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gurudhuvar terrorist attack police attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->