நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிசூடு! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

வங்கதேச கிரிக்கெட் அணியானது நியூசிலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை கிரிஸ்சர்ச்சில் துவங்க உள்ளது. 

இந்நிலையில் வங்கதேச வீரர்களில் சிலர் அருகில் இருந்த அல் அமூர் என்ற மசூதிக்கு தொலுகை செய்வதற்காக சென்றுள்ளனர். அந்த நாட்டு நேரப்படி மதியம் 1.45 மணிக்கு மசூதி அருகே பயங்கர சத்தத்துடன் துப்பாக்கியால் சராமாரியாக சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.

இதைக்கண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை கண்டு பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த பயங்கரவாத சம்பவத்தின் போது மசூதியின் உள்ளே இருந்ததால் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியயதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 

இதுகுறித்து பங்களாதேஸ் வீரர்கள் தங்களது ட்விட்டர் பதிவில், "அல்லாஹ்வின் கிருபையால் இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்துள்ளோம். நாங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான். இங்கு நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் பதைபதைக்கிறது. எல்லோரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளனர். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gun shoot in new zealand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->