கொரோனா உறுதியான மாணவர்களுக்கு கல்லூரி நுழைவுத்தேர்வு.. சிறப்பு வாகனத்தில் சென்று எழுதி வந்தனர்.!
Guangzhou Gaokao College Entrance Exam Corona Affected Students Written Exam with Protection
சீனாவில் உள்ள குவாங்க்ஸு (Guangzhou) நகரில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் இருந்து பிரத்தியேக வாகனம் மூலமாக காவோகேயோ (Gaokao) கல்லூரி நுழைவுத் தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வுக்கு தயாரான முதல் நாளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குவாங்க்ஸு நகரில் உள்ள 819 க்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் அங்குள்ள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் பொருட்டு மருத்துவமனையில் இருந்து தேர்வு மையத்திற்கு சென்று தேர்வுகள் எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், சிறப்பு வாகனங்கள் மூலமாக அவர்களின் தேர்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Guangzhou Gaokao College Entrance Exam Corona Affected Students Written Exam with Protection