துபாயில் இருந்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட கணவன்.. பதறிப்போன மனைவி.!! - Seithipunal
Seithipunal


துபாய் நாட்டில் கஷ்டப்படும் தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி சிவகங்கை மாவட்டத்தினை சார்ந்த பெண்மணி கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அரண்மனை சிறுவயல் பகுதியை சார்ந்தவர் சுரேஷ். இவர் குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக துபாயில் கொத்தனார் பணிக்காக சென்றுள்ளார். 

இந்நிலையில்., துபாய் நாட்டில் கூறிய பணியை கொடுக்காமல்., தன்னை வேறு வேலை செய்ய சொல்லி துன்புறுத்தியாகவும்., இதனால் குறித்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் மனைவியிடம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுரேஷ் தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ள வீடியோ காட்சியில்., கண்ணீர் மல்க ஆரம்பிக்கும் சுரேஷ்., தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறும்., சாலையில் பைத்தியம் போல திரிவதாக தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோ காட்சியை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சுரேஷின் மனைவியான கவிதா., இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயகாந்தனிடம் மனு அளித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl request to government rescue husband in dubai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->