பிரபல நடிகருக்காக உயிரை விட்ட ரசிகை..! பின்னணியில் வெளியான அதிர்ச்சி..!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வசித்து வரும் தினேஷ் புதிதத் என்பவருக்கு டோனி தோஜெய் என்ற மனைவி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்து இருக்கின்றது. தோனிக்கு பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் என்றால் மிகவும் பிடிக்கும். ரித்திக் ரோஷனின் படம், பாடல் என பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

ரித்திக் ரோஷன் மீது டோனியின் கணவருக்கு வெறுப்பு வரும் அளவிற்கு ரித்திக் ரோஷன் மீது காதல் இருந்துள்ளது. எனவே, கணவர் தினேஷ் ரித்திக் ரோஷன் படம், பாடல்கள் பார்ப்பதை நிறுத்தாவிட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இருப்பினும் ரித்திக் ரோஷன் மீது அதீத காதல் கொண்ட டோனியால் இதனை தவிர்க்க முடியவில்லை. இதன் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று காலையில் தான் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் தினேஷ். டோனியும் கணவன் இருக்கும் பொழுது பார்க்க வேண்டாமென முடிவு செய்திருந்தாராம். ஆனால், தினேஷ் தன்னுடைய மனைவியை குத்தி கொலை செய்து இருக்கின்றார். அதன்பின்னர் தான் கொலை செய்தது அவருக்கே புரிந்துள்ளது.

உடனடியாக டோனியின் தோழிக்கு சம்பவம் குறித்த தகவலை அனுப்பி விட்டு வீட்டிற்கு வெளியே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உயிரை விட்டுள்ளார். டோனியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என தினேஷ் முயற்சித்ததால் தான் இந்த விபரீதம் ஏற்பட்டது என தோனியின் நண்பர் தெரிவிக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl death for hrithick roshan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->