உலகமே கொரோனா பீதியில் இருக்கும் நிலையில், நீச்சல் குளத்தில் இளம்பெண் செய்த வேலை.. வைரலாகும் வீடியோ.!
girl bathed in swimming pool
சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோன, தற்போது பல நாடுகளில் கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது. பல நாடுகளில் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவில் உள்ள டெனஃரீப் என்ற ஓட்டலில் கொரோனா வைரஸ் அறிவுரையுடன் பிரிட்டன் பெண்ணொருவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். ஆனால் அந்த பெண் அங்கு உள்ளவர்களை மீறி ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தார்.
இதனை பார்த்த மற்றவர்கள் நீச்சல் குளத்தில் இறங்காமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்தனர். உடனே காவல்துறையினர் அங்கு வந்து அந்த பெண்ணை வெளியே வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அந்தப் பெண் அவர்கள் கூறியதைக் கேட்காமல் நீச்சல் குளத்தில் உல்லாசமாக குளியல் போட்டுள்ளார்.
உடனே காவல் அதிகாரி ஒருவர் நீச்சல் குளத்தில் இறங்கி அப்பெண்ணை வழுக்கட்டாயமாக மேலேயேற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
English Summary
girl bathed in swimming pool