மாரடைப்பால் இறந்த பெண் 6 மணிநேரம் கழித்து உயிருடன் எழுந்தார்... மருத்துவர் கூறிய அதிர்ச்சி காரணம்..!
girl alive after death in spain
ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்து வரும் 34 வயது பெண் ஒருவர் மாரடைப்பின் காரணமாக இருந்திருக்கிறார். பின்னர், ஆறு மணி நேரம் கழித்து உயிருடன் வந்த சம்பவம் காண்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்து வரும் ஆட்ரே மாஷ் என்னும் 34 வயது பெண் ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மாரடைப்பால் இறந்து விட்டதாக கருதிய அந்தப் பெண் மீண்டும் ஆறு மணி நேரம் கழித்து உயிர் பிழைத்திருக்கிறார்.
இதுகுறித்து, மருத்துவர் ஒருவர், அந்த பெண் 6 மணி நேரம் இதயத்துடிப்பு இல்லாமல் இருந்திருக்கிறார். பின்னர் உயிர் பிழைத்த அதிசயம் உலக நாடுகளில் இதுவரை நடந்ததாக தெரியவில்லை. ஆனால், ஸ்பெயின் நாட்டில் இதுவே முதல்முறையாக நடக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், அந்த பெண்ணின் உடலில் இருக்கும் வெப்பநிலை நீடித்திருந்தால் இறந்திருப்பார். ஆனால் அவர் உடலில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்ததால் அந்த பாதிப்பு அவரது மூளையை தாக்கவில்லை. எனவே தான் அவர் மீண்டும் உயிர் பிழைத்து இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.
அந்தப் பெண் இறந்ததற்கு காரணம் அதிக குளிர் நிறைந்த பகுதியில் இருந்துதான். அந்த குளிர் தான் அவரது உடல் வெப்பநிலையை குறைத்து இருக்கிறது. அதே குளிர் தான் அவரை உயிர் பிழைக்க வைத்திருக்கிறது என்று மருத்துவர் தெரிவித்தார்.
English Summary
girl alive after death in spain