குழந்தைகளை வளர்த்து கொத்தடிமையாக விற்பனை செய்யும் பயங்கரம்.. கானாவின் சோகங்கள்.!
Ghana Country Child Kidnapped and Sell Child Labor
உலகளவில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதில் பல நாடுகளில் இருந்து இயங்கும் கடத்தல் கும்பல் ஈடுபட்டு வருகிறது. இவர்களை கண்டறிந்து களையெடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அந்தந்த நாடுகள் தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது.
இந்நிலையில், கானா நாட்டில் குழந்தைகளை வளர்த்து, விற்பனை செய்யும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் கும்பலை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனைப்போன்ற குழந்தைகள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாகவும், கொத்தடிமைகளாகவும், வீட்டு வேலை மற்றும் பாலியல் தொழில் போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுவதும் உறுதியாகியுள்ளது.
இவர்களை இந்த சூழ்நிலைக்கு உள்ளாக்க பல காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், கானா நாட்டின் பொருளாதாரம் மற்றும் மருத்துவ பல் கவுன்சில் அறிக்கை வெளியிட்டு இதனை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், குழந்தை கடத்தலை தடுக்க பல அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Ghana Country Child Kidnapped and Sell Child Labor