அமெரிக்காவை அதிரவைத்த பிரான்ஸ் பலி எண்ணிக்கை... உலகளவில் முதலிடம் பிடித்த சோகம்.!!
France UK Nederland corona virus peoples death
சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தில் இருக்கும் யூகான் நகரினை சார்ந்த பெண்மணிக்கு கரோனா வைரஸ் முதன் முதலில் தாக்கியுள்ளது. இது சமூக தொற்றாக மாறி உலக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் கூட கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில், அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
உலகளவில் கரோனாவின் தாக்கத்திற்கு பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கையானது 1,015,728 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பலியான நபர்களின் எண்ணிக்கை 53,203 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 212,991 பேர் கரோனாவின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று ஒரேநாளில் பிரான்ஸ் நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் நேற்றைய நிலவரப்படி 59,105 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 1,355 பேர் பலியாகி, பலி எண்ணிக்கை 5,387 பேர் பலியாகியுள்ளனர்.
இதனைப்போன்று ஐரோப்பிய ஐக்கிய நாட்டிலும் 33,718 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று 569 பேர் பலியாகி, பலி எண்ணிக்கை 2,921 ஆக உயர்ந்துள்ளது. நெதர்லாந்து நாட்டிலும் 14,697 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 166 பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 1,339 ஆக உயர்ந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
France UK Nederland corona virus peoples death