பிரான்சில் ஒரே நாளில் 1400 பேர் பலி... மரண ஓலத்தில் அலறும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்து வருகின்றனர். சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகரில் துவங்கிய வைரஸ், தனது கோரமுகத்தை வைத்து உலக நாடுகளை பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. 

இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போதைய சில மருந்துகளை வைத்து இயன்றளவு மக்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த வைரஸின் தாக்கத்திற்கு உலக முழுவதும் 1,431,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 82,080 பேர் உயிரிழந்துள்ளனர். 302,149 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் 109,069 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் பெரும் அதிர்ச்சியாக 1,417 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 10,328 ஆக உயர்ந்துள்ளது. 

ஐரோப்பிய ஐக்கிய நாடுகளிலும் நேற்றைய நிலவரப்படி 55,242 பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நேற்று ஒரேநாளில் 786 பேர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை மொத்தமாக 6,159 ஆக உயர்ந்துள்ளது. பெல்ஜியம் நாட்டிலும் நேற்று அதிர்ச்சி தரும் விஷயமாக ஒரே நாளில் 403 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டின் பலி எண்ணிக்கை 2,035 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

France and UK corona virus peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->