தரையிறக்கப்பட்டநிலையில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்! பயணிகளின் நிலை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!!
fire acident in russia flight
ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ ஷெர்மெட்யெவோ விமான நிலையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 3 மணியளவில் ஏரோஃப்லோட்எஸ்யூ 1492 ரக விமானம் கிளம்பியது. மேலும் அந்த விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்களும் பயணம் மேற்கொண்டனர்.
ஆனால் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவலளிக்கப்பட்டு அவர்களின் உதவியோடு விமானம் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
மேலும் விமானம் தரையிறங்கி ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென விமானத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து விமானத்தின் அவசர வழியின் மூலமாக பயணிகள் வேக வேகமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் விமானம் முழுவதும் தீ வேகமாக பரவத் தொடங்கியது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 41 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் உயிர்தப்பியுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த விமான தீவிபத்து குறித்து மாஸ்கோ விமானநிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fire acident in russia flight