6 வயதில் மாயமாகி 19 வயதில் தாயுடன் இணைந்த மகள் ..!! முகநூலால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
Facebook reunited mother and daughter
14 ஆண்டுக்களுக்கு முன் கடத்தபட்ட மகள் பேஸ் புக் மூலம் மீண்டும் தாயுடன் இணைந்தார்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம் கிளர்மான்ட்டை பகுதியில் வசித்து வருபவர் ஏஞ்சலினா வின்சி. கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரின் மகள் ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் தனது ஆறு வயதில் மாயமானார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் தேடிவந்தனர்.
இந்த சம்பவம் நடந்த 14 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்நிலையில், 19 வயதான ஜாக்குலின் ஹெர்னாண்டஸ் தான் சிறுவயதில் கடத்தப்பட்டது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை அடுத்து ஏஞ்சலினா வின்சி தனது தாய் எனபதை அறிந்து கொண்ட ஜாக்குலின் அவரை தொடர்பு கொண்டு விபரங்களை கூறியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து புளோரிடா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இருவரும் தாய் மகள் என்பது உறுதியானது. இதனை அடுத்து கடத்தப்பட்டு மெக்சிகோவில் இருந்த ஜாக்குலினையும் அவரது தாய் ஏஞ்சலினாவையும் சந்திக்க வைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுப்பட்டனர்.
இருநாட்டு எல்லையில் அவர்கள் சந்திக்க வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 14 வருடங்களுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்ததால் அந்த இடமே நெகிழ்ச்சியானதாக மாறியது.
English Summary
Facebook reunited mother and daughter