காமெடிக்கு செய்து கம்பி எண்ணும் இளைஞர்.. சில்வண்டுகளே உஷார்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளத்தில் வைரலாவதற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் அவரை கம்பி எண்ண வைத்துள்ளது. 

இங்கிலாந்து நாட்டிலுள்ள லிவர்பூல் நகரில் ஓடும் ஆற்றில் ஒரு முதியவர் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளார். 74 வயது கொண்ட அந்த முதியவரை, இளைஞர் ஒருவர் அவருக்கு தெரியாமல் பின்னால் இருந்து எட்டி உதைத்து நீருக்குள் தள்ளி விடுகிறார். 

இந்த காட்சிகளை அவர் கிண்டல் செய்வதற்காக சிரிப்பது போன்று வீடியோ எடுத்த நிலையில், இது பெரும் வைரலாகியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகளும் கண்டனம் சந்தித்துள்ளது. மிகவும் குளிர்ந்த நீரில் முதியவரை எட்டி எதற்காக தள்ளிவிட்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கண்டனம் குவிந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம், விரும்பத் தகாத செயலில் ஈடுபட்ட இளைஞருக்கு சுமார் பத்து வருடங்கள் சிறை தண்டனை விதித்து 500 பவுண்டு வரை அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England Liverpool Man Getting Jailed Aged Man Attack on River Prank Video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->