#Breaking: வங்கிக்கடனாளி மல்லையாவிற்கு செக் வைத்த இங்கிலாந்து.. மாஸ் காட்டும் இங்கிலாந்து நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு நாடு கடத்தும் வழக்கிற்கு எதிராக இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்ய சென்ற, இந்திய வங்கி கடனாளி விஜய் மல்லையாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் மல்லையாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மல்லையா ஏற்கனவே அங்குள்ள லண்டன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்த நிலையில், இது தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்த நிலையில், இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கடனாளி விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள வங்கியில் பெரும் தொகையை கடனாக வாங்கி, பணத்தை திரும்ப செலுத்த வக்கில்லாமல் இலண்டனிற்கு தப்பி சென்ற நிலையில், சட்டதிட்டத்தின் படி கடனாளியை நாடுகடத்த இந்தியா வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கிற்கு எதிராக இங்கிலாந்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் கடனாளி மல்லையா தொடர்ந்து பல மனுக்களை தாக்கல் செய்து வரும் நிலையில், தற்போதைய மறுப்பு இந்திய வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மல்லையா மேல்முறையீடு மறுக்கப்படும் பட்சத்தில், 28 நாட்களுக்குள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England high court dismiss Vijay Mallya Appeal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->