கொரோனா பீதியிலும் வெட்டவெளியில் உல்லாசம்.. சமூக இடைவெளி முக்கியமென அறிவுரை கூறிய அதிகாரி..!!
England couple enjoy in park police gives warn and spoke social distancing
கரோனா வைரஸின் தாக்குதலால் இங்கிலாந்து நாடே உருக்குலைந்து இருக்கும் நிலையில், 88,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,329 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகரான இலண்டனில் பெரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பய சூழலிலும், அங்குள்ள பூங்கா பகுதியில் நடந்த தம்பதிகளின் போர்க்களம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸின் தாக்கத்தால் ஊரடங்கு அங்கும் அமலாகியுள்ள நிலையில், அவசர தேவைக்கு மக்கள் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி செய்யவும், பூங்காவில் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் குறிப்பிட்ட நேரம் வரை அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில், அங்குள்ள இலண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகேயுள்ள செயின்ட் ஜேம்ஸ் பூங்காவில் தம்பதி வந்துள்ளனர்.
இவர்கள் அங்குள்ள பூங்காவில் அங்கும் இங்கும் சுற்றிய நிலையில், நடைபாதையில் படுத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனைக்கண்ட பலரும் கண்டுகொள்ளாது விளங்கி சென்றனர். தம்பதி இருவரும் 15 நிமிடங்கள் தீவிர உல்லாசத்தில் ஈடுபட்ட நிலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் உல்லாச ஜோடியை அழைத்து விசாரித்துள்ளனர்.
இதனால் தம்பதிகளுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காவல் அதிகாரி பாதுகாப்பான தூரத்தில் நின்று கொரோனா தொடர்பான பாதுகாப்புக்கு சமூக இடைவெளி தேவை என்று கூறியுள்ளார். இந்த காட்சிகளை அப்பகுதியில் வளம் வந்த நபர் பதிவு செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
England couple enjoy in park police gives warn and spoke social distancing