கருப்பு நிறத்தில் உடையணிந்து உலா வரும் மர்ம நபர்... பொதுமக்கள் ஷாக்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள நார்விச் நகரின் கெல்ஸ்டன் பகுதியில் தெருவில் தலை முதல் உடலை மறைக்கும் வகையில் கருப்புநிற உடையை அணிந்து மர்ம நபர் நடமாடி வந்துள்ளார். மேலும், ஏற்கனவே கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இந்த மர்ம நபர் புகைப்படத்தை அப்பகுதியை சார்ந்த ஜெட் என்ற பெண் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

அம்மனிதர் அணிந்துள்ள உடை கடந்த 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பரவிய பிளேக் நோய் பரவிய சமயத்தில் மருத்துவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அணிந்த உடை என்பது தெரியவந்துள்ளது.இந்த விஷயம் குறித்து அப்பகுதி வாசி தெரிவிக்கையில், கரோனா காரணமாக ஏற்கனவே மக்கள் அச்சத்தில் உள்ளனர். முகக்கவசம் அணிந்திருக்கும் நபர்களை கண்டாலே மக்கள் பதற்றப்படும் வேலையில், எனது தாயாருக்கு போபியா உள்ளது. 

வினோத உடையணிந்த நபரை காண மக்கள் அச்சப்படுகின்றனர். கொளுத்தும் வேளையிலும் மக்கள் மற்றும் குழந்தைகளை அச்சப்படுத்த அந்த நபர் செயலாற்றி வருகிறார் என்று கூறியுள்ளார். இது குறித்த தகவல் காவல் துறையினருக்கும் தெரியப்படுத்தியுள்ள நிலையில், கரோனா பரவலின் காரணமாக மர்ம நபர் இந்த உடைய அணிந்து இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England corona virus panic dress


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->