இலங்கையின் புதிய அதிபர் யார்.? இன்று வாக்குப்பதிவு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காரணாத அளவு உயர்ந்தது. மேலும் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், பிரதமராக இருந்த மகிந்த ராசபக்ச கடந்த மே மாதம் தனது பதிவை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில், அவருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால் கோத்தபய ராஜபக்சே கடந்த ஒன்பதாம் தேதி மாலத்தீவு தப்பி சென்றார். அங்கிருந்து சிங்கப்பூருக்கு  சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். 

அதன்பிறகு, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். மேலும் புதிய அதிபரை தேர்வு செய்ய 20ஆம் தேதி (இன்று) பாராளுமன்றத்தில் எம்பிக்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள் என அறிவித்தார். இதையடுத்து, புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, ஜெ.வி.பி. கட்சி தலைவர் அனுராகுமாரதிசநாயக, இலங்கை கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா ஆகிய நான்கு பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பேறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் அறிவித்தபடி, இன்று இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election of president of sri lanka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->