அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 15 பேர் பலி.!!
earthquake in pakistan 15 people death
பாகிஸ்தானில் ஹர்னா என்னும் இடத்திலிருந்து வடகிழக்கே சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலக்கடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பொருள் சேதம் குறித்து முழு விவரம் வெளியாகவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
English Summary
earthquake in pakistan 15 people death