அடுத்தடுத்து அதிரும் உலக நாடுகள்... இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம்..!! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷியாவில் சுமித்ரா தீவு கடற் பகுதியில் இன்று (ஜன.16) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6:30 மணி அளவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலநடுக்கம் ஆனது இந்தோனேஷியாவின் சிங்கில் நகருக்கு தென்கிழக்கு 48 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 30 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜப்பான் அருகே உள்ள இசு தீவில் இன்று (ஜன.16) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலில் சுமார் 49 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை எவ்வித சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. அடுத்தடுத்து பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Japan followed by Indonesia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->