மேற்கு இந்தோனேசியாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!
Earthquake hits western Indonesia
இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான பெங்குலுவில் தெற்கு கடற்கரையில் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 5.41 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது இந்தோனேசியாவின் பாகர் ஆலமிலிருந்து தென்மேற்கே 127 கிலோமீட்டர் (79 மைல்) தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தார்.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் தனிம்பார் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake hits western Indonesia