பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு
Earthquake hits Pakistan
பாகிஸ்தானில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானிலும் உணரப்பட்டது.
பாகிஸ்தானின் பெஷாவர், லோயர் டிர், சித்ரால், கைபர் மாவட்டம், வஜிரிஸ்தான், டேங்க், பஜூர், மர்தான், பராசினார், முர்ரி, மன்செஹ்ரா, அபோதாபாத், முல்தான், ஷேகுபுரா, சினியோட் மற்றும் கோட்லி ஆகிய இடங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நேற்று இரவு 7:25 மணியளவில் 173 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.nமேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.