இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 7 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

துஷான்பே நக இருந்து கிழக்கு - தென்கிழக்கு சுமார் 341 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் கடுமையாக குலுங்கி உள்ளது. பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்த இருக்கலாம் என கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர். 

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கத்தை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் 7 மணி அளவில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earth quake in tajikistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->