சீனாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவம்.. பீதியில் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்.!
earth quake in china
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது இந்தியா உள்ளிட்ட பல்லேறு நடுகையில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் 129 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த 64 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
உலகம் முழுக்க 245,850 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க 10,047 மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். சீனாவில் 80,967 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சீனாவில் 3,248 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து திபெத் தன்னாட்சிப் பகுதியில் 5.9 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிகேஜ் நகரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து முழு விவரம் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.